தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன் பின் 'பருத்தி வீரன்' படம் மூலம் வியக்கத்தக்க அறிமுகமாக தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த இரண்டாவது படமான 'ஆயிரத்தில் ஒருவன்' வெளிவர மூன்று வருடங்கள் ஆனது. அந்தப் படம் தோல்வியில் தான் முடிந்தது. அடுத்து வெளிவந்த 'பையா' படம்தான் அவருக்கு வெற்றியைத் தந்தது.
தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பார்த்து வந்த கார்த்தி இந்த பத்து வருடத்தில் 15 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவற்றில் 'பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா' ஆகியவை அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால், கடைசியாக வெளிவந்த 'காஷ்மோரா, காற்று வெளியிடை' ஆகிய படங்கள் அவருக்குத் தோல்விப் படங்களாக அமைந்து அவருடைய மார்க்கெட்டை கொஞ்சம் கீழிறக்கிவிட்டது.
இருந்தாலும் கடந்த வாரம் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வெற்றிப் படங்களாகவும் அமைந்துவிட்டது. முந்தைய இரண்டு படங்களின் தோல்வியை, தீரன் சரி செய்துவிட்டார். இனி, கார்த்தி, கதாபாத்திரத் தேர்விலும், கதை தேர்விலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.