ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் அவர்களது குழுவினர் முதலில் 'பைரசி'யை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொன்னார்கள். ஆனால், ஒரு ஆண்டு காலம் மேல் ஆகியும் இன்னும் 'பைரசி' இணையதளங்களை ஒழிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக 'பைரசி' இணையதளத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக விஷால் தரப்பில் மிகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அதன் பின் அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.
எந்தத் திரைப்பட விழா நடந்தாலும் பைரசியை விரைவில் ஒழிப்பேன் என்று சொல்லி வருகிறார்களே தவிர அதை அவர்களாலும் ஒழிக்க முடியவில்லை. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளராக இருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவே, ஒரு ரசிகரிடம் பைரசி இணையதளத்தில் படத்தைப் பார்த்து விடுங்கள், எங்களது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பெயரைச் சொல்லி யாருக்காவது 10 டாலர் தானமாக வழங்கி விடுங்கள் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் சப்டைட்டிலுடன் எங்கள் பகுதியில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைப் பார்க்க முடியவில்லை என்று கேட்டதற்குத்தான் அவர் அப்படி பதில் அளித்துள்ளார். ஒரு பக்கம் பைரசி இணையதளங்களை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் பைரசி இணையதளங்களில் படத்தைப் பாருங்கள் என்று சொன்னதன் மூலம் விஷால் தரப்பினரால் இன்னும் 'பைரசி' இணையதளங்களை ஒழிக்க முடியவில்லை என்றே தெரிகிறது. அதற்காக அவர்கள் செய்தது என்று சொன்னதெல்லாம் வீண் செலவுதான் என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.