தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தொடர்ந்து பதிவிடுபவர். டுவிட்டரை விட்டு அவர் விலகினாலும், இன்னமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாகுபலி இயக்குனர் ராஜமௌலி அவருடைய டுவிட்டரில் நடிகர்கள் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோருடன் ஒரு சோபாவில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ராஜமௌலி இயக்க உள்ள அடுத்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்க உள்ளதாக அந்தப் புகைப்படம் பற்றிய செய்திகள் வருகின்றன.
இதனிடையே சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம் கோபால் வர்மா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த போட்டோவை பதிவிட்டு, “பெண்களை மிகவும் வணங்குபவனாக இருப்பதால், கே கலாச்சாரத்தை வளர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தரம் தாழ்ந்து ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
இதற்கு தெலுங்குத் திரையுலக ரசிகர்கள் அனைவரும், குறிப்பாக ஜூனியர் என்டிஆர், ராம் சரணின் ரசிகர்கள், ராம் கோபால் வர்மாவுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வளவு சர்ச்சைகளுக்கிடையிலும் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பிக்கிறார்.