ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலியின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கப்போகும் அடுத்த படம் என்ன? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. மகாபாரதத்தை ஆயிரம் கோடி செலவில் இயக்கப்போகிறார் என்றார்கள். ரஜினி படம் இயக்கப்போகிறார் என்றார்கள். நேதாஜியின் வாழ்க்கை வராற்றை இயக்கப்போகிறார் என்றார்கள். மகேஷ்பாபுவின் அடுத்த படம் என்றார்கள். ஆனால் இப்போது ராஜமவுலி இயக்கப்போவது ராம்சரண் தேஜாவும், ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கப்போகும் பக்கா ஆக்ஷன் படம் ஒன்றைத்தான்.
இதை ராஜமவுலி நேரடியாக அறிவிக்கவில்லை. ராம்சரண் தேஜா மற்றம் ஜூனியர் என்.டி.ஆருக்கு நடுவில் ராஜமவுலி கைகோர்த்தபடி ஜாலியாக அமர்ந்திருக்கும் படம் ஒன்றை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன் பாகுபலி படத்தை தன் புரொபைல் பிக்சராக வைத்திருந்த ராஜமவுலி தற்போது இந்தப் படத்தை புரொபைல் பிச்சராக வைத்திருக்கிறார் இதன் முலம் இந்த இருவரையும் வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்று தெரிகிறது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.