ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை தீபிகா படுகோனே, பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது.
ராணி பத்மவாதியை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி இந்த எதிர்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தணிக்கை சான்றிதழும் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வருகிற டிசம்பர் 1ந் தேதி வெளிவருவதாக இருந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் அகில இந்திய பாரதீய சத்ரிய மகாசபா என்ற அமைப்பினர் பத்மாவதி படத்துக்கு எதிராக பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலுகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்று மனு கொடுத்தனர். பின்னர் தீபிகா மற்றும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது உருவ பொம்மையை எரித்தனர்.
உயிரோடு எரித்தால் பரிசு
அதன் பின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர் சிங் "நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். ராணி பத்மாவதியின் தியாகம் தீபிகாவுக்கு தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார். இது பாலிவுட் திரை நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணி பத்மாவதி எதிரிகளிடமிருந்து மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தன் தோழிகளுடன் நெருப்பில் குதித்து மாண்டார் என்று வரலாறு கூறுவது குறிப்பிடத்தக்கது.
தலைக்கு ரூ.10 கோடி
இதேப்போன்று ஹரியானா மாநிலத்தின் பா.ஜ.,வின் செய்தி ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர் சிங்கின் காலையும் உடைக்க வேண்டும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.