'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் நாட்டில் இப்போது வருமானவரித்துறை சோதனைக் காலம். இதற்கு முன்பு ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாவும் இருந்தவர்கள் வீடுகள், அலுவலங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வீட்டிலும் சோதனை நடந்தது.
இதையொட்டி கமல் தனது டுவிட்டரில் குற்றவாளிகள் நாட்டை ஆளக்கூடாது என்று மாநில அரசையும் குற்றத்தை கண்டுபிடித்தவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம் தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்... என குறிப்பிட்டு உள்ளார்.