டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்து இயக்கியவர் மணிவாசகம். தனது ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் இதனை தயாரித்தார். வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பிறகு அந்த நிறுவனமும் முடங்கி விட்டது. இப்போது மணிவாசகத்தின் வாரிசு காந்தி மணிவாசகம் சினிமா களத்தில் குதிக்கிறார். ராஜபுஷ்பா நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பில் இறங்குகிறது. காந்தி மணிவாசகம் தயாரித்து இயக்கும் படத்திற்கு களவாணி மாப்பிள்ளை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ரகுநந்தன் இசை அமைக்கிறார் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.