தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக உருவெடுத்த சமந்தா, பின்னர் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதை யடுத்து மீண்டும் தமிழுக்கு வந்து விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போதும் விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் உற்சாகமாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு நடிகையாய் எனது வாழ்வில் ஒரு அற்புதமான அத்தியாயத்தை தற்போது நான் தொடங்கியிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு மனம், கத்தி, தெறி, பத்து எண்ற துக்குள்ள உள்பட பல நல்ல படங்களில் நடித்தேன்.
இதேபோல் இனிமேலும், என் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அழகான அழுத்த மான கதைகள் மூலம் எனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.