ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்து உள்ளதாக ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் கர்னி சேனா என்ற அமைப்பை தீபிகாவின் மூக்கை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்தது. இன்னொரு அமைப்போ, தீபிகாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் தீபிகாவின் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறுபுறம் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்று தராமல் இழுத்தடிப்பதாக புகாரும் எழுந்துள்ளது.
இவ்வளவு பிரச்னைகள் எழுந்த போதும் படத்தை திட்டமிட்டி படி வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே பத்மாவதி புரொமோஷன் ஒன்றில் பங்கேற்ற தீபிகாவிடம், கர்னி சேனா விடுத்த மிரட்டல் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது...
நம் நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. படத்தில் எந்த காட்சியும் தவறாக இல்லை. ஒரு பெண் நடிகையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளேன். இருந்தாலும் சிலரின் எதிர்ப்பு என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. எனக்கு கோபம் வருகிறது. ஆனால் சிலர் செய்யும் இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. படம் திட்டமிட்டபடி வெளியாகும்.
இவ்வாறு தீபிகா கூறினார்.