வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர் பிரியங்கா. சென்னை செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு. அது இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இயக்குனர் பாலாவின் கண்பட்டு சினிமா பாடகியாகவும் ஆனார். அவன் இவன் படத்தில் "ஒரு மலையோரம்..." என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார்.
இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. அதுவும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன். இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாசுடன் பாடியிருக்கிறார்.
நாச்சியார் படத்தில் இடம்பெறும் "ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து" என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இதனை தமிழச்சி தங்க பாண்டியன் எழுதியுள்ளார். பிரியங்கா திரைப்பட பின்னணி பாடகியாக வேகமாக வளர்ந்து வருகிறார்.