டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ், கபாலி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன், தற்போது ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு இசை அமைத்து வருகிறது.
இந்தப் படத்திற்கு நவீன கருவிகளை கொண்டு இசை அமைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த சந்தோஷ் நாராயணனை, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்சி விமான நிலையத்தில் பரிசோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தி உள்ளனர். அவரிடம் இருந்த திருநீர் மற்றும் குங்குமத்தை ரசாயண சோதனைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சிட்னி விமான நிலையத்தில் 8 முறை கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். பல மணி நேரம் தனி விசாரணை என்ற பெயரில் கெடுபிடி சோதனை செய்தனர். இது அவர்கள் இனவெறியுடன் நடந்து கொள்வதையே காட்டுகிறது. என்று கூறியிருக்கிறார்.