இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆந்திர அரசின் திரைப்பட விருதான நந்தி விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கு விருது அறிவிக்கப்பட்டடது. இதில் 2015 ஆண்டுக்கான விருது பட்டியலில் பாகுபலி படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை இயக்கம், சிறந்த உடை அலங்காரம், சிறந்த சண்டை, சிறந்த இசை என 13 விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் நடித்த பிரபாசும், அனுஷ்காவும் புறக்கணிக்கப்பட்டு விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேப்போன்று மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த மனம் படத்திற்கு போதிய விருதுகள் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதவிர இன்னும் பல படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேசமயம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதற்காகவே என்.டி.பாலகிருண்ணா நடித்த லெஜண்ட் படத்திற்கு 9 விருதுகள் வாரி வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதோடு தேர்வு குழுவில் இருந்தவரும் பாலகிருஷ்ணா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பை பெற்ற வருண் தேஜா நடித்த முகுந்தா படமும் விருதுவில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல்தான் காரணம் என்கிறார்கள். தெலுங்கு திரையுலகில் நந்தி விருது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.