தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படத்திற்கு ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சித்தூர் மகாராணி பத்மாவதி பற்றி படம் தவறாக சித்தரிப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வட மாநிலங்களில் பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் தருவதாக ஒத்துக் கொண்டிருந்த தணிக்கை குழு, திடீரென அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. தணிக்கை குழுவிற்கு அனுப்பிய விண்ணப்பம் நிறைவாக இல்லை, குறைகள் இருக்கிறது என்று கூறி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளது. என்ன குறை என்று அவர்கள் தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் எழுந்து வரும் எதிர்ப்பு காரணமாக விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி அஜித் ஆந்த்தே கூறியதாவது: தணிக்கை குழு விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது உண்மைதான். குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிப்போம். படத்துக்கு எதிராக நடந்து வரும் பிரச்னைகளுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. திட்டமிட்டபடி படம் டிசம்பர் 1ந் தேதி வெளியாகும். என்றார்.