விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தயாரிப்பாளர்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்? என்று கேட்டு நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பற்றிய விபரம் வருமாறு:
சமீபத்தில் நடந்த அண்ணாதுரை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலளார் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் சங்கத்திற்கு 3 புகார் வந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அவர்கள் யார் என்பதை சொல்லவில்லை. அவர்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என்று சரத்குமார் அதே மேடையில் சொன்னார். இந்த நிலையில் அந்த மூவர் வடிவேலு, சிம்பு மற்றும் த்ரிஷா தான்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் நஷ்டத்தைத் தொடர்ந்து, சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு தராததோடு பாதி படம் முடிந்த நிலையில் இனிமேல் நடிக்க முடியாது இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து ரிலீஸ் செய்யுங்கள் மீதியை இரண்டாம் பாகமாக வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் படத்தை அவசரமாக முடித்து வெளியிட்டதில் தயாரிப்பாளருக்க 18 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்துக்காக வடிவேலு மீது தயாரிப்பாளர் ஷங்கர் புகார் கொடுத்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு போடப்பட்டுள்ள அரங்குகள் இதற்காக இருக்கிறது. இதனிடையே, வடிவேலுவும் படப்பிடிப்புக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சாமி 2 படத்தில் முதலில் ஒப்புக் கொண்ட த்ரிஷா பின்பு அப்படத்திலிருந்து திடீரென்று விலகி உள்ளார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவருடைய விலகலைத் தொடர்ந்து, படத்தின் கதையைவே மாற்றக் கூடிய சூழலுக்கு படக்குழு தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் தயாரிப்பாளருக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மீது தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்தவுடன், தவறு யார் மீதிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.