நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் வெளியாக உள்ள படம் பத்மாவதி. இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீபிகா படுகோன, சஞ்சய் மீது கொலை மிரட்டல்கள் வருகின்றன. படம் வெளியாக விடமாட்டோம் என குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள சித்தார்த் மல்கோத்ரா, சஞ்சய் லீலா பன்சாலி மரியாதைக்குரிய நல்ல இயக்குநர், அவருடைய முந்தைய படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஒரு படத்தை பார்க்காமல் எதிர்ப்பது என்பது தவறு. படத்தில் எந்த காட்சிகள் இருக்கலாம், இருக்க கூடாது என முடிவு செய்ய வேண்டியது சென்சார் தான். பத்மாவதி படம் ரிலீஸாக திரையுலகம் உதவும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.