இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் வழக்கம் போல் வடிவேலுவின் டார்ச்சர் எல்லை மீறிப்போனதால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர்.
வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தபோது அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் விஷால். இதனால் கடுப்பான ஷங்கர் விஷயத்தை கவுன்சில் செயலாளர்களான கதிரேசன், ஞானவேல்ராஜாவின் கவனத்துக்குக் கொண்டுபோனார். நடிகர்கள் மீது கவுன்சிலுக்கு புகார்கள் வந்தால் நான் தலையிட மாட்டேன்.. நீங்களே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
எனவே விரைவில் வடிவேலுவை பஞ்சாயத்துக்கு அழைத்து ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை வசூலிக்க இருக்கின்றனர்.