பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பத்மாவதி படத்துக்கு வக்காலத்து வாங்கும், நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டுவோம் என ஒரு அமைப்பும், அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு அளிப்போம் என மற்றொரு அமைப்பும் மிரட்டல் விடுத்து உள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை படமாக்கி உள்ளார். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பத்மாவதி படம் வெளியாவதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என, தீபிகா தெரிவித்திருந்தார். இதற்கு, ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு, பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
மூக்கை வெட்டுவோம்:
‛சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் வெட்டியது போல், நாங்கள், தீபிகாவின் மூக்கை வெட்டுவோம் என அந்த அமைப்பின் ராஜஸ்தான் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். படம் வெளியாகும் அன்று, நாடு தழுவியளவில், பந்த் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று உ.பி.,யை சேர்ந்த சாத்ரிய சமோஜ் அமைப்பு, தீபிகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும், இயக்குநரும் இந்த படத்தை வெளியிடும் முயற்சியை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன. இதன்காரணமாக தீபிகாவின் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.