மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் இறுதி நாளன்று பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறை குறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
ஜல்லிகட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி பகுதிகளுக்கு சென்று நேரடி விசாரணை நடத்திய நீதிபதி நேற்று சேலம் சென்றார். அங்கு விசாரணையை முடித்த நீதிபதி. நிருபர்களிடம் கூறியதாவது:
ஜல்லிகட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை 1951 பேர் பிரமாண பத்திரம் அனுப்பி உள்ளனர். இவர்களில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஜல்லிகட்டு போராட்டத்தின் போது பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்ற ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர், நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பபட்டு விசாரணை நடத்தப்படும். என்றார். ரஜினி, கமல், அஜித் தவிர முன்னணி நடிகர்களும், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.