‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேங்ஸ் ஆப் வசிப்பூர், புக்ரே, சரப்ஜித் போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரிச்சா சத்தா. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இவரிடத்தில் பத்மாவதி படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... நான் என்ன சொன்னாலும், அது பிரச்னையாகிவிடும். ஆகவே ஒவ்வொருவரின் உணர்வையும் நான் மதிக்கிறேன். நானும் இந்து குடும்பத்தை சேர்ந்தவள் தான். ஒரு படத்தால் அந்த மதம் உடைந்து விடாது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முதலில் படத்தை பாருங்கள், பின்பு எதிர்ப்பு தெரிவியுங்கள், படத்தை பார்க்கும் முன்னர் எதிர்ப்பது தவறானது. மேலும் ஒரு படத்தை வெளியிட தணிக்கை வாரியம் என்ற ஒன்று உள்ளது. அவர்கள் அனுமதி பெற்று தான் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்றார்.
ரிச்சா சத்தா நடிப்பில் அடுத்தப்படியாக, "புக்ரே ரிட்டர்ன்ஸ்" படம் அடுத்தமாதம் 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது.