தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கமல் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக, பதிலளிக்க போலீஸ்க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் பேசும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசுகையில், இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது என்று அவர் பேசிய கருத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கமல் மீது சில இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவரும் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.