ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகார்ஜூனா நடித்த சிவா படத்தின் மூலம் இயக்குனரானவர் ராம் கோபால் வர்மா. அதையடுத்து இவர்கள், கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் மீண்டும் இணைந்தனர். கடந்த 23 ஆண்டுகளாக அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் நாகார்ஜூனா நடிப்பில் ஒரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. நாகார்ஜூனா தயாரித்து நடிக்கும் அந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை தபு ஆகியோர் நடிப்பதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியை ராம்கோபால்வர்மா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சனும், தபுவும் நடிக்கவில்லை. இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ள அவர், நாகார்ஜூனா நடிக்கும் படம் ஆக்சன் கதையில் உருவாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.