பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஆந்திர மாநில அரசின் என்டிஆர் தேசிய விருது வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
விருது அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் ரஜினிகாந்த்தை அவர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்று குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார். அதோடு ஆந்திர அரசு தொடர்ந்து என்னை ஆதரித்து வருவதற்கு நன்றி கடன் பெற்றிருப்பதாகவும் கமல் கூறியிருந்தார்.
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ரஜினிகாந்த்தும் வாழ்த்திய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கமல்ஹாசனை 'கமல்' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
கமல்ஹாசன் வாழ்த்தியதைப் போல பட்டப் பெயருடன் சேர்த்து வாழ்த்தவில்லை. ஒருவேளை கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் 'உலக நாயகன்' என்று அழைப்பது ரஜினிகாந்துக்குத் தெரியாதோ. அல்லது, அப்படி அழைத்து அவருடைய அரசியல் இமேஜை இன்னும் அதிகப்படுத்த வேண்டாம் என நினைத்தாரோ தெரியவில்லை.
நேற்று அவர்கள் இருவரது டுவீட்டையும் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக 'சகுனி' படத்தில் கார்த்தியும், சந்தானமும் பேசிக் கொள்ளும் 'ரஜினி, கமல்' வசனம் கண்டிப்பாக ஞாபகத்திற்கு வந்திருக்கும்.