ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் சீனியர் நடிகை ஜெயசுதா. அதன்பிறகு தவசி, தோழா ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்க தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயசுதா. தனது கணவரின் மறைவுக்குப்பிறகு தெலுங்கு படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஜெயசுதா, மணிரத்னம் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஜனவரியில் மணிரத்னம் தொடங்கும் புதிய படத்தில் ஒரு அழுத்தமான அம்மா வேடத்தில் ஜெயசுதா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.