அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் சீனியர் நடிகை ஜெயசுதா. அதன்பிறகு தவசி, தோழா ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்க தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயசுதா. தனது கணவரின் மறைவுக்குப்பிறகு தெலுங்கு படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஜெயசுதா, மணிரத்னம் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஜனவரியில் மணிரத்னம் தொடங்கும் புதிய படத்தில் ஒரு அழுத்தமான அம்மா வேடத்தில் ஜெயசுதா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.