'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் சீனியர் நடிகை ஜெயசுதா. அதன்பிறகு தவசி, தோழா ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்க தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயசுதா. தனது கணவரின் மறைவுக்குப்பிறகு தெலுங்கு படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஜெயசுதா, மணிரத்னம் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஜனவரியில் மணிரத்னம் தொடங்கும் புதிய படத்தில் ஒரு அழுத்தமான அம்மா வேடத்தில் ஜெயசுதா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.