ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் சீனியர் நடிகை ஜெயசுதா. அதன்பிறகு தவசி, தோழா ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்க தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயசுதா. தனது கணவரின் மறைவுக்குப்பிறகு தெலுங்கு படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஜெயசுதா, மணிரத்னம் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஜனவரியில் மணிரத்னம் தொடங்கும் புதிய படத்தில் ஒரு அழுத்தமான அம்மா வேடத்தில் ஜெயசுதா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.