இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த அரசியல் சர்ச்சை காரணமாக எதிர்பார்த்ததை விடவும் மெகா ஹிட்டானது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் என்கிற இடத்தையும் மெர்சல் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விஜய், அட்லீ துபாய் பறந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மெர்சல்-2 கதை விவாதத்திற்காகத்தான் விஜய்யும், அட்லீயும் துபாய் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், துபாய்க்கு அவர்கள் சென்றிருப்பது, மெர்சல்-2 சம்பந்தமாக அல்ல, மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.