விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
நடிகர் கமல்ஹாசன் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடு முழுக்க பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இன்னும் சிலர் அவரை கொல்ல வேண்டும் என்று கூட சொன்னார்கள். இந்நிலையில் அவர் எழுதி வரும் வார இதழ் தொடரில் இந்தவாரம் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
மதம் குறித்து நான் பேசியதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடின தொனி இருப்பதாக ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும் தான் போதிக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.