அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் கமல்ஹாசன் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடு முழுக்க பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இன்னும் சிலர் அவரை கொல்ல வேண்டும் என்று கூட சொன்னார்கள். இந்நிலையில் அவர் எழுதி வரும் வார இதழ் தொடரில் இந்தவாரம் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
மதம் குறித்து நான் பேசியதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடின தொனி இருப்பதாக ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும் தான் போதிக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.