டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கும் படம் பொதுநலன் கருதி. "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தில் அறிமுகமான சந்தோஷ் ஹீரோவாகவும், புதுமுகம் அனுசித்தாரா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாகரன், ஆதித் அருண், யோக் ஜேப்பி, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது:
பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி என்கிறார் இயக்குனர் சீயோன்.