டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைக்கு சின்னத்திரை சீரியல்கள் மிகவும் பிரபலம், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகள் சீரியல் நாயகியாக நடித்தார்கள், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமெஷ் என்பது பலருக்கும் ஆச்சர்யம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
முதலில் கமலா காமேஷ் பற்றி பார்ப்போம். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலா காமேஷ். அப்போது மேடை கச்சேரி நடத்துவதில் புகழ்பெற்ற காமேஷின் மனைவி. கணவரின் இசை நிகழ்ச்சியல் பாடிக் கொண்டிருந்தவர் கணவரின் நண்பர் ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்தார். அதன் பிறகு விசு நடத்திய நாடகங்களில் நடித்த கமலா கமேஷ், பாரதிராஜாவின் கண்களில் பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு தென்னந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்து விட்டார்.
அதற்கு முன்னதாக தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய பிறகு தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் தொடரான ஒரு மீனின் கண்ணீர் என்ற தொடரின் நாயகி கமலா காமேஷ்.