ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்றைக்கு சின்னத்திரை சீரியல்கள் மிகவும் பிரபலம், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகள் சீரியல் நாயகியாக நடித்தார்கள், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமெஷ் என்பது பலருக்கும் ஆச்சர்யம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
முதலில் கமலா காமேஷ் பற்றி பார்ப்போம். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலா காமேஷ். அப்போது மேடை கச்சேரி நடத்துவதில் புகழ்பெற்ற காமேஷின் மனைவி. கணவரின் இசை நிகழ்ச்சியல் பாடிக் கொண்டிருந்தவர் கணவரின் நண்பர் ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்தார். அதன் பிறகு விசு நடத்திய நாடகங்களில் நடித்த கமலா கமேஷ், பாரதிராஜாவின் கண்களில் பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு தென்னந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்து விட்டார்.
அதற்கு முன்னதாக தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய பிறகு தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் தொடரான ஒரு மீனின் கண்ணீர் என்ற தொடரின் நாயகி கமலா காமேஷ்.