இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்றைக்கு சின்னத்திரை சீரியல்கள் மிகவும் பிரபலம், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகள் சீரியல் நாயகியாக நடித்தார்கள், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமெஷ் என்பது பலருக்கும் ஆச்சர்யம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
முதலில் கமலா காமேஷ் பற்றி பார்ப்போம். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலா காமேஷ். அப்போது மேடை கச்சேரி நடத்துவதில் புகழ்பெற்ற காமேஷின் மனைவி. கணவரின் இசை நிகழ்ச்சியல் பாடிக் கொண்டிருந்தவர் கணவரின் நண்பர் ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்தார். அதன் பிறகு விசு நடத்திய நாடகங்களில் நடித்த கமலா கமேஷ், பாரதிராஜாவின் கண்களில் பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு தென்னந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்து விட்டார்.
அதற்கு முன்னதாக தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய பிறகு தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் தொடரான ஒரு மீனின் கண்ணீர் என்ற தொடரின் நாயகி கமலா காமேஷ்.