இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கடேச பிரசாத் (தாயாக ரோகினி நடித்தார்). இவர் தெலுங்கில் பெரிய நடிகர் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய நடிகர் ஆனார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெங்கட பிரசாத் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாராம். சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்த பெண்ணை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். 2 முறை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கட் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு போதை மருந்து கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கட பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.