டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கடேச பிரசாத் (தாயாக ரோகினி நடித்தார்). இவர் தெலுங்கில் பெரிய நடிகர் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய நடிகர் ஆனார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெங்கட பிரசாத் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாராம். சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்த பெண்ணை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். 2 முறை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கட் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு போதை மருந்து கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கட பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.