ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாபாஜி மீது.. பாபாஜி தியானம் செய்த குகையில் தியானம் செய்வதற்காக அடிக்கடி ரஜினி இமயமலைக்குச் செல்வார். உடல்நலக்குறைவு காரமாண கடந்த சில வருடங்களாக செல்லவில்லை.
பாபாஜி குகைக்கு செல்கிறவர்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில்தான் தங்க முடியும். குகை அருகில் தங்க வசதி இல்லை. இதனால் ரஜினியும் அவரது நண்பர்களும் இணைந்து பாபா குகை கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீபாபாஜி தியான நிலையம் கட்டி உள்ளனர். இதில் 30 பேர் வரை தங்கிக் கொள்ளவும், தியானம் செய்யவும், உணவு தயாரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது இதில் ரஜினியின் நண்பர்கள் வி.எஸ்.ஹரி, வி.டி.மூர்த்தி, வழக்கறிஞர் விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், டாக்டர் திலீபன், மும்பை வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2.ஓ, மற்றும் காலா பட வெளியீட்டுக்கு பிறகு மார்ச் மாதம் ரஜினி இந்த தியான நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.