'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாபாஜி மீது.. பாபாஜி தியானம் செய்த குகையில் தியானம் செய்வதற்காக அடிக்கடி ரஜினி இமயமலைக்குச் செல்வார். உடல்நலக்குறைவு காரமாண கடந்த சில வருடங்களாக செல்லவில்லை.
பாபாஜி குகைக்கு செல்கிறவர்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில்தான் தங்க முடியும். குகை அருகில் தங்க வசதி இல்லை. இதனால் ரஜினியும் அவரது நண்பர்களும் இணைந்து பாபா குகை கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீபாபாஜி தியான நிலையம் கட்டி உள்ளனர். இதில் 30 பேர் வரை தங்கிக் கொள்ளவும், தியானம் செய்யவும், உணவு தயாரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது இதில் ரஜினியின் நண்பர்கள் வி.எஸ்.ஹரி, வி.டி.மூர்த்தி, வழக்கறிஞர் விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், டாக்டர் திலீபன், மும்பை வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2.ஓ, மற்றும் காலா பட வெளியீட்டுக்கு பிறகு மார்ச் மாதம் ரஜினி இந்த தியான நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.