பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
'காற்று வெளியிடை' படத் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலேயே பலர் நடிப்பதால் ஒருவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது.
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்பு அவருடைய அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே சரியாகப் போக மாட்டார். அவரை நம்பி எப்படி மணிரத்னம் அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் கோலிவுட்டில் கேள்விகள் எழுந்தன. அதனால் மணிரத்னம் ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வர வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை சேர்த்திருக்கிறாராம்.