தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'காற்று வெளியிடை' படத் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலேயே பலர் நடிப்பதால் ஒருவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது.
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்பு அவருடைய அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே சரியாகப் போக மாட்டார். அவரை நம்பி எப்படி மணிரத்னம் அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் கோலிவுட்டில் கேள்விகள் எழுந்தன. அதனால் மணிரத்னம் ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வர வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை சேர்த்திருக்கிறாராம்.