'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக விளங்கும் துல்கர் சல்மான், பாலாஜி மோகன் இயக்கத்தில் 'வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவற்றில் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப்படமான வாயை மூடி பேசவும் படம் தோல்வியடைந்தது. ஓகே கண்மணி வெற்றியடைந்தது.
துல்கர் நடித்த ஸோலோ சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஒரு நாள் கூட ஓடவில்லை. இந்நிலையில் 'கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த திருடா திருடா படத்தின் பாடல் வரியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 'துருவநட்சத்திரம்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருபவருமான ரீத்துவர்மா இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையான இதில் துல்கர் சல்மான் சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.