தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக விளங்கும் துல்கர் சல்மான், பாலாஜி மோகன் இயக்கத்தில் 'வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவற்றில் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப்படமான வாயை மூடி பேசவும் படம் தோல்வியடைந்தது. ஓகே கண்மணி வெற்றியடைந்தது.
துல்கர் நடித்த ஸோலோ சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஒரு நாள் கூட ஓடவில்லை. இந்நிலையில் 'கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த திருடா திருடா படத்தின் பாடல் வரியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 'துருவநட்சத்திரம்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருபவருமான ரீத்துவர்மா இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையான இதில் துல்கர் சல்மான் சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.