வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக விளங்கும் துல்கர் சல்மான், பாலாஜி மோகன் இயக்கத்தில் 'வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவற்றில் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப்படமான வாயை மூடி பேசவும் படம் தோல்வியடைந்தது. ஓகே கண்மணி வெற்றியடைந்தது.
துல்கர் நடித்த ஸோலோ சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஒரு நாள் கூட ஓடவில்லை. இந்நிலையில் 'கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த திருடா திருடா படத்தின் பாடல் வரியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 'துருவநட்சத்திரம்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருபவருமான ரீத்துவர்மா இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையான இதில் துல்கர் சல்மான் சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.