பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தெலுங்கில் பாகுபலி எடுக்கப்பட்டது போல், மலையாளத்தில் 'அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா - கிங் ஆஃப் ட்ராவன்கூர்' என்ற படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. இந்த படம் கேரளாவில் திருவிதாங்கூர் மகாணத்தை ஆண்ட மகாராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் வாழ்க்கை வரலாறாம்!
இந்த படத்தில் திருநாள் மார்த்தாண்டவர்மா ராஜா கேரக்டரில் 'பாகுபலி'யில் பல்வாள் தேவனாக நடித்த ராணா நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல மலையாளப்பட இயக்குநரான கே.மது இயக்குகிறார்.
மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' படம் உட்பட பல மலையாள படங்களை இயக்கியவர் இவர். தவிர, தமிழில் 'மௌனம் சம்மதம்' என்ற படத்தை இயக்கியவரும் இவர்தான்.
ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி கலைஞர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களும், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். பாகுபலி படத்தைப் போல் இந்தப் படத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.