டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் நீங்கள் அறிமுகமான படம் எது என நடிகை மெஹ்ரீனிடம் கேட்டால் அவரால் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று சொல்ல முடியாது. இதுவரை இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒரு படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து அப்படத்தின் நீளத்தைக் குறைப்பதாகச் சொல்லி படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவரது மொத்த காட்சிகளையுமே வெட்டி தூக்கி எறிந்த படமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் அமைந்துவிட்டது. இப்பட வெளியீட்டிற்கு முன்பு பத்திரிகையளார்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன், “படத்தில் நாயகி மெஹ்ரீன் வரும் காட்சிகள் அனைத்துமே அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்கும். படத்தில் அந்த காட்சிகள் என்டெர்டெயினிங் ஆக இருக்கும்,” என்றார்.
ஆனால், நேற்று மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தூக்கிய பின் வெளிப்படையாகவே மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது சம்பந்தமாக மெஹ்ரீன் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இயக்குனர் சுசீந்திரன் அவரது அடுத்த படத்திற்காக மெஹ்ரீனை நாயகியாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளாராம்.
இதே, ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைத்து இப்படி காட்சிகளை நீக்கியிருந்தால் அந்த நடிகை சும்மா இருந்திருப்பாரா...?.