பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் நீங்கள் அறிமுகமான படம் எது என நடிகை மெஹ்ரீனிடம் கேட்டால் அவரால் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று சொல்ல முடியாது. இதுவரை இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒரு படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து அப்படத்தின் நீளத்தைக் குறைப்பதாகச் சொல்லி படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவரது மொத்த காட்சிகளையுமே வெட்டி தூக்கி எறிந்த படமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் அமைந்துவிட்டது. இப்பட வெளியீட்டிற்கு முன்பு பத்திரிகையளார்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன், “படத்தில் நாயகி மெஹ்ரீன் வரும் காட்சிகள் அனைத்துமே அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்கும். படத்தில் அந்த காட்சிகள் என்டெர்டெயினிங் ஆக இருக்கும்,” என்றார்.
ஆனால், நேற்று மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தூக்கிய பின் வெளிப்படையாகவே மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது சம்பந்தமாக மெஹ்ரீன் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இயக்குனர் சுசீந்திரன் அவரது அடுத்த படத்திற்காக மெஹ்ரீனை நாயகியாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளாராம்.
இதே, ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைத்து இப்படி காட்சிகளை நீக்கியிருந்தால் அந்த நடிகை சும்மா இருந்திருப்பாரா...?.