பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகரும், பிரபல நடிகர் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நரகாசூரன்' படத்தில் 'லட்சுமன்' என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள படங்களில் இவர் அதிகம் ஏற்று நடித்த போலீஸ் வேடம் தான் இதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனின் 'சர்வம்' படத்தில் ஆர்யாவின் நண்பராக தலைகாட்டியவருக்கு தமிழில் இது இரண்டாவது படம்..
இந்தப்படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட இந்திரஜித், “நரகாசூரன் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம்.. புதிய சினிமா மொழியில் இதன் கதையும் பட உருவாக்கமும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை பல ஆச்சர்யங்களுக்கு இந்தப்படம் ஆளாக்கும்” என படத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் இந்திரஜித்.