பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடித்த 'அறம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடியாத முக்கியமான பிரச்னையை மிகவும் தைரியமாக சொல்லியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.
இதில் கலெக்டராக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது., திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபாலும் 'அறம்' படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அமலாபால் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
“ஆக.. நல்ல படம் ஜெயிக்கும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக பண்ணப்படும் படங்கள் நிறைந்த இந்த சினிமாவில் அந்த பார்முலா தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே” என சந்தடி சாக்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் 'உரசி'யிருக்கிறார் அமலாபால்.