அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடித்த 'அறம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடியாத முக்கியமான பிரச்னையை மிகவும் தைரியமாக சொல்லியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.
இதில் கலெக்டராக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது., திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபாலும் 'அறம்' படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அமலாபால் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
“ஆக.. நல்ல படம் ஜெயிக்கும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக பண்ணப்படும் படங்கள் நிறைந்த இந்த சினிமாவில் அந்த பார்முலா தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே” என சந்தடி சாக்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் 'உரசி'யிருக்கிறார் அமலாபால்.