'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பாகுபலி' படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டார் ராணா. கேரளாவிலும் பாகுபலி படம் ராணாவுக்கான விசிட்டிங் கார்டாக மாறிவிட்டது. பாகுபலி முதல் பாகம் வெளியானபோதே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் ராணாவை மலையாளத்தில் நடிக்க வைக்க விரும்பினர். ஆனாலும் நீண்ட நாட்களாக பிடிகொடுக்காமல் இருந்த ராணா, இப்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆம்.. பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்கும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா' என்கிற வரலாற்று படத்தில் மார்த்தாண்ட வர்மாவாக நடிக்க இருக்கிறார் ராணா. திருவாங்கூர் அரசர்களான மார்த்தாண்ட வர்மா மற்றும் கார்த்திகா வர்மா பற்றிய வரலாற்றுக்கதையாக இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.