பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் ஸ்ரீதாத் என்பவர் மெர்சல் படத்திற்காக விஜய்யின் கட்வுட் கட்டும் பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு விஜய் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த உதவியை வழங்குவதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் முன்னிலையில் நிவாரணத் தொகையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டையும் தாண்டி கேரளாவில் விஜய்க்கு உயிரைக் கொடுக்கிற ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு நிதி கொடுத்தாலும் அது ஸ்ரீநாத்தின் உயிருக்கு ஈடாகாது. அந்த குடும்பத்தின் மகனாக விஜய் இருப்பார் என்றார்.
பின்னர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது "விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. காலம் அவரை எப்படி மாற்றும் என்பதை யாராலும் கணிக்க முடியாது" என்றார்.
மெர்சலுக்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் "மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தான் மெர்சல் படத்தில் வசனமாக வைத்தனர். அதில் ஜிஎஸ்டி பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. ஆனால் தவறான கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறி நடத்தப்பட்ட போராட்டங்களால் படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது" என்றார்.